பெண்களின் உடல்களை தொட்டு காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்ட பொலிஸ்!!

562

மத்திய அரசின் ரூபாய் நோட்டுகள் ஒழிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்கள் மீது பொலிசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவித்து 250 அப்பாவி மக்களின் உயிரைப் பறித்திருக்கிறது. மேலும் 2017 ஆம் ஆண்டு ஆரம்பித்தும் பணப்பற்றாக்குறை நிலவி வருகின்ற நிலையில், டிசம்பர் 31ம் திகதி நாடு முழுவதும் இடதுசாரி இயக்கங்கள் போராட்டம் நடத்தின.

சென்னையில் இடதுசாரி அமைப்புகளில் ஒன்றான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் போராட்டம் நடத்தினர். சென்னை மேடவாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினரிடம் பொலிசார் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும், இன்ஸ்பெக்டர் ரவி, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் உடல்களை வேண்டுமென்றே தொட்டு ஈனப் பிறவியாக செயல்பட்டிருக்கிறார்.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அடக்குமுறை குறித்து வாக்குமூலம் அளித்துள்ளனர்.