மனைவி, மகள்கள் உட்பட 11 பேரை கழுத்தறுத்து கொன்ற கொடூரன் : அதிர வைக்கும் சம்பவம்!!

508

இந்தியாவில் நபர் ஒருவர் மனைவி, மகள்கள உட்பட 11 பேரை கழுத்தறுத்து கொன்று தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்திலே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

குடும்ப பாரத்தினால் 45 வயதான ஜமாலுதீன் தனது மனைவி மற்றும் 5 மகள்கள், சகோதரர்களின் மனைவிகள் என 11 பேரை பூச்சி மருந்தை கொடுத்து கத்தியால் கழுத்தறுத்து கொன்று பின்னர், அவரும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

எனினும், சம்பவயிடத்தில் இரண்டு கத்திகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மர்மநபர்கள் சிலர் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என்னும் கோணத்திலும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.