பிரபல ரவுடி காதலியுடன் வாழ்ந்த வாழ்க்கை : அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது!!

874

சென்னை பொலிசாருக்கு பல நேரங்களில் சவாலாக விளங்கி வந்தவர் நீராவி முருகன் (36). தூத்துக்குடியை சேர்ந்த இவர் மீது 45க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

துரைப்பாக்கத்தில் தனியார் பள்ளி ஆசிரியை வேலத்திடம் செயின் பறித்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அவரை பொலிசார் கடந்த மாதம் கைது செய்தார்கள்.

தற்போது சிறை கம்பி எண்ணி கொண்டிருக்கும் நீராவி முருகனை பற்றி தெரியாத ஒரு விடயத்தை பற்றி பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

நீராவி முருகனுக்கு கடவுள் பக்தி அதிகமாம். முன்னர் அவன் வேறு குற்றசெயலில் ஈடுப்பட்டு தலைமறைவாக இருந்த போது ஆந்திர மாநிலத்தின் ரேணிகுண்டாவில் தன் காதலி ரேவதி வீட்டில் இருந்துள்ளார்.

அங்கு அவரை பொலிசார் பிடித்த போது மொட்டை தலையுடன் இருந்துள்ளான். அதற்கான காரணம் கேட்டதற்கு தனக்கு சாமி நம்பிக்கை அதிகம் என்றும் இது திருப்பதி கோவிலில் தன் காதலியுடன் போன போது போட்ட மொட்டை எனவும் இது தன் பாவத்தை கழிக்க என அவர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல், செயின் பறிக்கும் போது அடையாளம் தெரியாமல் இருக்க அடிக்கடி தன்னுடைய கெட்டஅப்பை மாற்ற மொட்டையடிப்பதும் இவர் வழக்கமாம்.

ஏற்கனவே கணவனை இழந்த ரேவதியுடன் தாலி கட்டாமல் கணவனாக நீராவி முருகன் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.