ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கலுக்கு முன்பாக தீர்ப்பு வருவது சந்தேகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது நடத்தும் வகையில் ஜல்லிக்கட்டு நடத்த இடைக்கால அனுமதி கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இடைக்கால அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உத்தரவிட்டனர்.
மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உடனடியாக தீர்ப்பளிக்க முடியாது என்றும், ஜல்லிக்கட்டு குறித்து தீர்ப்பு எழுதப்பட்டு வருவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உச்சநீதிமன்றம் வெளியிட்ட கருத்தால் பொங்கல் பண்டிகைக்கு முன்னால் ஜல்லிக்கட்டு நடத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.






