இறுதிவரை போராடி தோற்ற இலங்கை அணி..

507

168646515MS00015_Sri_Lanka_

இலங்கை அணிக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ண லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி தலைவர் மத்யூஸ் துடுப்பெடுத்தாட்டத்தை தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர் குஷால் பெரேரா முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். டில்ஷான் 20 ஓட்டங்களை பெற்று வெளியேறினார். தொடர்ந்து வந்த துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற குமார் சங்ககார மட்டும் தனி ஆளாக இலங்கை அணியை மீட்க போராடினார். இறுதியில் அவரால் 68 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. மூன்று வீரர்களை தவிர அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்ககொள்ள இறுதியில் இலங்கை அணி 37.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. நியூசிலாந்து அணி சார்பில் மெக்லிநகன் 4 விக்கெட்களையும்  மில்ஸ், நதன் மெக்கலம் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

மிகவும் இலகுவான இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு எரங்க ஆரம்பத்தில் அதிர்ச்சியளித்தார். இவர் வீசிய 4வது ஓவரில் ரோஞ்சி  7  ஓட்டங்களுடனும் கப்டில் 25 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.அடுத்து வந்த மலிங்க தனது வேகத்தால் நியூசிலாந்து வீரர்களை கதிகலங்க வைத்தார். ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 80 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நதன் மெக்கலம் 32 ஓட்டங்களை பெற்று நியூசிலாந்து அணியை வெற்றி பாதைக்கு இட்டுச்சென்றார்.

இலங்கை அணி பந்து வீச்சாளர்கள் இறுதிவரை மிகச் சிறப்பாக பந்துவீசி நியூசிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். நடுவர்களின் சில தவறான தீர்ப்புக்கள் இன்றைய போட்டியை மாற்றியது என கூறலாம். இறுதியில் நியூசிலாந்து அணி 1 விக்கெட்டினால் வெற்றிபெற்றது இலங்கை சார்பில் சிறப்பாக பந்து வீசிய மலிங்க 4 விக்கெட்டுகளையும்  எரங்க 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இன்றைய தோல்வியின் மூலம் இலங்கை அணியின் அரை இறுதிக்கான வாய்ப்புகள் கேள்விகுறியாகியுள்ள நிலையில் அடுத்துவரும் இரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

~கேசா~