முதல்வரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை : சசிகலாவின் கணவர் நடராஜன்!!

794

 

தமிழகத்தில் தற்போது முதல்வரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது முதல்வரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சி நன்றாக நடைபெற்று வருவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கணவர் நடராஜன் கூறியுள்ளார்.

தஞ்சாவூரில் தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா கணவர் நடராஜன்,

முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் தற்போது சிறப்பான ஆட்சி நடந்து வருகிறது. சசிகலா முதல்வர் ஆவது குறித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

30 ஆண்டு காலமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை தோளில் சுமந்தது எனது மனைவி சசிகலா தான். எம்.ஜி.ஆர். இறந்த பிறகு ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பாக நாங்கள் தான் இருந்தோம்.

நாங்கள் குடும்ப அரசியல் செய்வோம், நாங்கள் மாட்டேன் எனவும் சொல்லவில்லை என்றும் நடராஜன் தெரிவித்துள்ளார்.