14 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திதாகக் கூறப்படும் நபரை பொலிஸார் டில்லியில் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் ராம்பூரை சேர்ந்த சுனில் என்பவர் தன்னுடைய 12 வயதில் பிழைப்புக்காக டில்லி சென்றுள்ளார். இவருக்கு தற்போது திருமணமாகி மனைவி, 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர்.
இவர் நாடே அதிர்ச்சியுறும் வகையில் கடந்த 14 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிறு பெண்கள் மீது மோகம் கொண்ட சுனில், பாடசாலையில் படிக்கும் மாணவிகளை தொடர்ந்து பொலிஸாரின் வலையில் சிக்காமல் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்துள்ளார்.
இவர் 7 முதல் 10 வயதிலான மாணவிகளையே குறி வைத்து செயல்பட்டுள் ளார். இவர் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் மாணவிகளிடம் தெரிந்தவர் போல பேச்சுக்கொடுத்து அவர்களை ஏற்கனவே திட்டமிட்டு வைத்திருந்த மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் வல்லுறவுக்குட் படுத்தியுள்ளார்.
இதே போல தொடர்ந்து சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்து வந்த சுனில் கடந்த 2004ஆம் ஆண்டு பக்கத்து வீட்டு சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். பின்னர் அருகிலுள்ளவர்கள் அவரைப் பிடித்து அடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 10ஆம் திகதி இரு பெற்றோர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடொன்றை கொடுத்துள்ளனர். அதில் தங்கள் பிள்ளைகள் பாட சாலை முடிந்து வரும்போது யாரோ மர்ம நபரால் கடத்தி கொடுமைப்படுத்தப் படுவதாக கூறப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த போது சுனில் தான் மாணவிகளை கடத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி இவ்வாறு செய்து வந்துள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து சுனிலை கைது செய்த பொலிஸார் அவனிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பொலிஸார் தெரிவித்துள்ளதாவது, பாலியல் வல்லுறவு முறைப்பாட்டில் கைது செய்யப்பட்டுள்ள டெய்லர், சுனில் ரஸ்தோகி, நூற்றுக்கணக்கான சிறுமியரை பாலியல் வல்லுறவு செய்ததாக, ஒப்புக் கொண்டுள்ளான்.
தனியாக நடந்து செல்லும், 7 – 10 வயதுக்குட்பட்ட சிறுமியரிடம், அவர்களின் பெற்றோர், ஆடை அல்லது வேறு பொருட்கள் கொடுக்கச் சொன்னதாக கூறி, அவர்களை தனிமையான இடத்துக்கு சுனில் அழைத்து செல்வான்.
பின், அவர்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி விட்டு, தப்பியோடி விடு வான். பல ஆண்டுகளாக, இந்த குற்றங்களை தொடர்ச்சியாக செய்து வந்து ள்ளதாக கூறியுள்ளான்.
இத்தனை ஆண்டுகளாக, அவன் பற்றிய உண்மைகள் தெரியாமல் போனது, ஆச்சரியமாக உள்ளது. சுனில், உத்தரபிரதேச, மாநிலம் ராம்பூரைச் சேர்ந்தவன் 1990இல், குடும்பத்தினருடன், டில்லியில் வந்து குடியேறினான்.
அவனுக்கு மூன்று பெண்கள் உட்பட, ஐந்து குழந்தைகள் உள்ளன. தனது பெண் குழந்தைகளிடமும், அவன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டானா என்பது குறித்து, விசாரணை நடந்து வருகிறது.
கடந்த, 2014இல், கிழக்கு டில்லியில் வசித்த சுனில், ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தபோது பிடிபட்டான். அந்த பகுதியைச் சேர்ந்தோர், சுனிலை அடித்து, உதைத்து அங்கிருந்து துரத்தி விட்டனர். சுனில், திருட்டுகளில் ஈடு பட்டு வந்துள்ளதும், போதைப் பொருள் பழக்கமுள்ளது என்பதும், விசா ரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் கூறியுள்ளனர்.