பொலிசே வாகனங்களுக்கு தீ வைத்து எரித்து நாடகமாடிய கொடூரம் : வெளியான அதிர வைக்கும் காட்சிகள்!!

269

சென்னையில் இடம்பெற்ற வன்முறையின் போது பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆட்டோவிற்கு தீ வைக்கும் சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர வைத்துள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரீனாவில் அமைதியாக போராடி வந்த போராட்டகாரர்களை இன்று பொலிசார் தடியடி நடத்தி களைக்க முயற்சி செய்தனர்.

மெரீனாவிற்குள் வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதைகண்டித்து சென்னையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மெரீனாவிற்கு அருகே உள்ள பகுதிகளில் வன்முறை வெடித்தது.

இதன்போது, வாகனங்கள் பல தீ வைத்து எரிக்கப்பட்டது. மக்கள் தான் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்ததாக குற்றம்ச்சாட்டப்பட்டு வரும் நிலையில் தற்போது பரபரப்பு வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

அதில், பொலிஸ் அதிகாரி ஒருவர் ஆட்டோ ஒன்றிற்கு தீ வைக்கும் அதிர வைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள காட்சி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.