காதலர்களுக்கு உதவி செய்த 13 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு கோவிலிலுள்ள சூலாயுதத்தில் குத்தி வைக்கப்பட்ட சம்பவமொன்று தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் தஞ்சை மாவட்டம், பாபநாசம் வீராஞ்சேரி வடக்கு வீதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். விவசாயி. இவரது மகன் அருண்குமார்(13). 8ஆம் தரம் படித்து வந்துள்ளார்.
நேற்று முன்தினம் குறித்த பகுதியிலுள்ள கோவிலின் சூலாயுதத்தில் அருண்குமார் உடல் குத்திவைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பொலிஸார் விசாரணை செய்ததில், அதே பகுதியை சேர்ந்த குருநாதன் மகள் கலைசெல்வி(19). குடந்தையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தாதியாக பணி புரிந்து வருகிறார்.
இவருக்கும், தேவனோடை பகுதியை சேர்ந்த அழகர் மகன் அருள் (22) என்பவருக்கும் காதல் இருந்து வந்தது. இவர்களது காதலுக்கு அருண்குமார் உதவி செய்து வந்துள்ளார்.
3 மாதங்களுக்கு முன் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். ஆத்திர மடைந்த கலைசெல்வியின் சகோதரன் பொன்னுசாமி கதிரவன் (23), தாய்மாமன் சரவணன் (35) ஆகியோர் அருண்குமார் மீது கோபத்தில் இருந்து வந்தனர்.
அவர்கள் இருவரும் அருண்குமாரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து உடலை கோயில் சூலாயுதத்தில் தலைகீழாக குத்தி வைத்துள்ளனர்.
இதனையடுத்து பொன்னுசாமிகதிரவன், சரவணன் ஆகியோரைக் கைது செய்த கபிஸ்தலம் பொலிஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.






