பீட்டா இந்தியா சி.இ.ஒ பூர்வா ஜோஷிபுரா நடிகர் கமலஹாசன் ட்வீட்டுக்கு பதலிளித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டத்தை அடுத்து நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் பீட்டாவை சாடி பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவில், அமெரிக்காவில் காளையை அடக்கும் போட்டிக்கு தடை விதியுங்கள். தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க முடியாது என சாடியிருந்தார்.
இந்நிலையில் பத்திரக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த பீட்டா இந்தியா சி.இ.ஒ பூர்வா ஜோஷிபுரா கூறியதாவது, விலங்குகள் எதிரான கொடுமையை தடுத்து, அதன் உரிமையை நிலைநிறுத்தும் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.
பீட்டா இந்தியா, இந்தியாவுக்குள் மட்டும் மிருகவதைக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்பு.
அதே போல் பீட்டா அமெரிக்கா அமைப்பு, கடந்த 1980-ஆம் முதல் அமெரிக்காவில் நடக்கும் மிருகவதை பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது என பதிலளித்துள்ளார்.






