தனுஷின் உண்மையான பெற்றோர் யார் : மதுரை உயர் நீதிமன்றத்தில் தனுஷ்!!

494

நடிகர் தனுஷ் தங்களது மகன் என கதிரேசன், மீனாட்சி ஆகியோர் தொடர்ந்த வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன், அவரது மனைவி மீனாட்சி ஆகியோர் மேலூர் நீதித்துறை நடுவர்மன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். இதுகுறித்து அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:

திரைப்பட நடிகர் தனுஷ் எங்கள் மகன். அவரது இயற்பெயர் கலைச்செல்வன். மேலூரிலும், திருப்பத்தூரிலும் படிக்க வைத்தோம். சென்னை சென்ற அவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக பெயரை தனுஷ் என மாற்றிக்கொண்டார். அவரை எங்களுடன் வருமாறு அழைத்தோம். ஆனால் அவர் வரமாட்டேன் என்று கூறிவிட்டார்.

மேலும் எங்களுக்கு வயதாகிவிட்டது. மருத்துவச் செலவுக்கு பணம் தேவைப்படுகிறது. அவர் எங்களுக்கு மாதம் ரூ.65 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடவேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தனுசை நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை மார்ச் 3ம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில் நடிகர் தனுஷ், மேலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும். அந்த வழக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையை பிப்ரவரி 8ம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.