பணம் தந்தால் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாமா : பிரபல நடிகரை வம்புக்கிழுத்த சீமான்!!

263

மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்காக நடத்திய போரட்டத்தை முடித்து வைக்க நடிகர் ராகவா லாரன்ஸ் யார் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் போராட்டம் நடைபெற்ற போது சென்னை மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டார்.

தனக்கு உடல் நலம் சரியில்லாத நிலையிலும் அவர் ஆர்வமாக தொடர்ந்து போரட்டத்தில் பங்கேற்று மாணவர்கள் மற்றும் இளைஞர்களை உற்சாகப்படுத்தினார்.

மேலும், அவர்களுக்கு 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்க தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். போராட்டம் முடிவு பெறும் நேரத்தில் மாணவர்களிடன் லாரன்ஸ் போராட்டத்தை கைவிடுமாறு பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த விடயத்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், மாணவர்கள் போராட்டத்தை முடித்து வைக்க ராகவா லாரன்ஸ் யார் என வினவியுள்ளார்.

அவருக்கும் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என கூறிய சீமான் லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததால் போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என்று சொல்கிறாரா என கோபமாக சீமான் பேசியுள்ளார்.