250 வழக்குகளில் தேடப்படும் இந்த அழகிய பெண் யார்?

303

டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநில பொலிசார் 250 வழக்குகளில் ஒரு பெண்ணை தேடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இப்பெண்ணின் பெயர் குஷ்பு ஷர்மா(28). தந்தையின் அரவணைப்பில் வளர்ந்த இவர் விபத்து ஒன்றில் தனது வலது கையை இழந்தவர்.

பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இவர் ஐ.ஏ.எஸ் படித்தவர் என்றும், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் என்றும் பல வேடங்களில் வலம் வருபவர்.

தனது அழகால் பல்வேறு ஆண்களை தனது வலையில் வீழ்த்திய இவர், அவர்களிடம் இருந்து பல்வேறு பொருட்கள் மற்றும் பணத்தினையும் கொள்ளையடித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு டெல்லியில் காரில் வரும் ஒருவரிடம் லிப்ட் கேட்டுள்ளார். காரில் செல்லும்போதே அவரிடம் பேச்சு கொடுத்து தன்பக்கம் ஈர்த்தவர், அவருடன் இன்பமாக இருக்க தயார் என்றும் தனக்கு ஒரு கருத்தடை மாத்திரை வாங்கித்தரும்படியும் கேட்டுள்ளார்.

உடனே காரில் சென்றவர் மெடிக்கல் ஷாப் அருகே காரை நிறுத்தி கருத்தடை மாத்திரை வாங்க சென்றவுடன் அந்த காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதேபோல் பல மோசடி புகார்கள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி பொலிசாரால் கைது செய்யப்பட்ட இவர், அங்கிருந்து தப்பியுள்ளார்.

ஆனால், எப்படி தப்பித்தார் என்பது மர்மமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. டெல்லியில் மட்டுமே இவர் மீது 35 வழக்குகள் உள்ளது.

ஆங்கிலம், இந்தி ஆகிய இருமொழிகளை சரளமாக பேசும் திறமை படைத்தவர்கள் என்பதால் ஆண்களை வீழ்த்துவற்கு நல்ல வசதியாக இருந்துள்ளது.