அலுவலகத்தில் பெண் ஊழியருக்கு நேர்ந்த விபரீதம்!!

249

புனே மாவட்டத்தில் மென்பொறியாளர் ஊழியர் ஒருவரை பாதுகாவலர் கொலை செய்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புனே ஹின்ஜிவாடியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் கேரளாவை சேர்ந்த ராசிலா ராஜூ பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் ராசிலா ராஜூவிடமிருந்து ஒன்லைனில் தனது தலைமை நிறுவன ஊழியரிருடன் தொடர்பில் இருந்துள்ளார்.

திடீரென இந்த தொடர்பு துண்டிக்கப்பட்டதால், தலைமை நிறுவன ஊழியர் பாதுகாவலரை தொடர்பு கொண்டுள்ளார்.இதனையடுத்து, ராசிலாவின் அறையில் சென்று பார்த்தபோது அவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதில், இன்போசிஸ் நிறுவனத்தின் பாதுகாவலர் பாபேன் சாய்ல்சியா, கணினியின் ஓயரால் ராசிலாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.