பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பெண் 15 நாட்களின் பின் உயிருடன் மீட்பு!!

299

well

சீனாவின் ஹெனான் மாகாணம் ஜோங்பெங் கிராமத்தைச் சேர்ந்தவர் சூ கிஜியு (38). இவர் கடந்த 1ம் திகதி பிற்பகல் மூலிகை சேகரிப்பதற்காக காட்டிற்குச் சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனையடுத்து அவரை அவரது கணவர் தேட ஆரம்பித்தார்.

ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இதுபற்றி பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், காட்டுப்பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றுக்குள் அவர் விழுந்து கிடந்தது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தீயணைப்பு படையினர் உடனடியாக அங்கு சென்று மயக்க நிலையில் கிடந்த சூ கிஜியூவை மீட்டனர். பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. உடலில் வெளிக்காயங்கள் எதுவும் இல்லை. ஆனால், நீண்டநாட்கள் பட்டினியாக கிடந்ததால் அவரால் பேச முடியவில்லை. திரவ உணவு மட்டுமே சாப்பிட முடிகிறது.

மூலிகை பறிக்கச் சென்ற சூ கிஜியு கால் தவறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். ஒரு மீட்டர் விட்டமும், 4 மீட்டர் ஆழமும் கொண்ட அந்த கிணற்றின் சுவர் மிகவும் மென்மையாக இருந்ததால் அவரால் மேலே ஏற முடியவில்லை. அவர் வைத்திருந்த சோளத்தைச் சாப்பிட்டும் மழை நீரை குடித்தும் 15 நாட்கள் உயிர்வாழ்ந்துள்ளார்.