உன்னை பார்க்கவே பிடிக்கவில்லை : கொன்றது ஏன்? கொலையாளியின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

284

இந்தியாவின் புனே மாநிலத்தில் உள்ள இன்போஸில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்பவர் ரசிலா ராஜீ (25) கேரள மாநிலத்தை சேர்ந்தவரான இவர் பணிக்காக புனேவில் தங்கியுள்ளார்.

ரசிலா வேலை செய்யும் நிறுவனத்துக்கு ஞாயிறு விடுமுறை தினமாகும். ஆனால் அவருக்கு அன்று முக்கிய பணி இருந்ததால் அவர் மட்டும் வேலைக்கு வந்தார்.

அவர் வேலையில் இருந்த போது மேலாளர் தொலைபேசியில் கோல் செய்துள்ளார், ஆனால் ரசிலா போனை எடுக்கவில்லை, இதையடுத்து காவல் பணியில் அப்போதிருந்த காவலாளி அங்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது ரசிலா வயரால் கழுத்து அறுப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்..பின்னர் பொலிசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் இது குறித்து விசாரித்தார்கள்.

விசாரணையில், முதல் ஷிப்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர் தான் ரசிலாவை கொலை செய்து விட்டு தப்பியோடியது தெரியவந்தது.

பபென் செயில்சியா என்ற அந்த பாதுகாவலரின் செல்போன் சிக்னலை வைத்து அவர் மும்பை இரயில் நிலையத்தில் இருக்கிறார் என பொலிசார் கண்டறிந்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், சம்பவம் நடைபெற்ற போது ரசிலா அறைக்கு சென்றுள்ள பபென் அவரிடம் தகராறு செய்துள்ளான்.

ரசிலா உன் முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை,வெளியில் போ என கூற கோபமான அவன் கேபிள் வயரை வைத்து அவர் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான் என தெரியவந்துள்ளது.

இது குறித்து பபெனிடம் பொலிசார் இன்னும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.