தனது மூளையில் கட்டி இருப்பதாக பொய் கூறி திருமணத்தை நிறுத்திய மணமகன் உட்பட 5 பேர் கைது!!

283

தனது மூளையில் கட்டி இருப்­ப­தாக நாடகம் ஆடி திரு­ம­ணத்தை நிறுத்­திய மண­மகன் உட்­பட 5 பேரை பெங்­க­ளூர் பொலிஸார் கைது செய்த சம்­பவம் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. பெங்­க­ளூரு மாநகர், கவுடன பாளையா பகு­தியை சேர்ந்த வர­த­ராஜன் என்­ப­வ­ரது மகன் ரங்­கநாத். இவர் தனியார் கம்­பனியில் வேலை பார்த்து வரு­கிறார்.

ரங்­க­நாத்­துக்கும், சிக்­கல சந்­திரா பகு­தியை சேர்ந்த ஒரு இளம்­பெண்­ணுக்கும் இரு­வ­ரது குடும்­பத்தை சேர்ந்த பெரி­ய­வர்கள் கூடி திரு­மணம் நிச்­ச­யித்­தனர்.

இந்த இளம்­பெண்ணும், ஒரு தனியார் நிறு­வ­னத்தில் பணி புரிந்து வரு­கிறார்.இவர்­களின் திரு­மண விழாவை எதிர்­வரும் 3ஆம் திகதி நடத்த முடிவு செய்­யப்­பட்டு, பெண் வீட்டார் தரப்பில் அனைத்து ஏற்பா­டு­களும் தட­பு­ட­லாக நடை­பெற்று வந்­தன.

திரு­ம­ணத்­திற்கு 5 நாட்­களே உள்ள நிலையில் திடீ­ரென்று மண­மகன் ரங்­கநாத், கடந்த 24 ஆம் திகதி தனக்கு நிச்­ச­யிக்­கப்­பட்ட பெண்ணை தொலை­பே­சியில் அழைத்து தனக்கு மூளையில் கட்டி இருப்­ப­தா­கவும் (பிரெயின் ட்யூமர்) ஆகையால் இந்த திரு­மணம் வேண்டாம், ஏற்­பா­டு­களை நிறுத்திவிடுமாறும்­ கூ­றி­னாராம்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், கண்­ணீரும், கம்­ப­லை­யு­மாக நீங்கள் தற்­போது எங்கிருந்து பேசு­கி­றீர்கள், நானே நேரில் வரு­கிறேன். விரி­வாக பேசலாம் என்று ரங்­க­நாத்­திடம் கேட்டுள்ளார்.

அதற்கு ரங்­கநாத் மறுப்பு தெரி­வித்து, ”எனது டாக்டர் நண்பர் ஒரு­வரே, என்னை பரி­சோ­தித்து மூளையில் கட்டி இருப்­பதை உறுதி செய்துள்ளார். ஆதலால் நமக்கு இந்த திரு­மணம் சாத்­தி­ய­மில்லை. என்னை மறந்து விடு” என்று டயலாக் பேசி, ரங்­கநாத் போனை துண்­டித்து விட்­டாராம்.

ஆனால் ரங்­கநாத் எதையோ மறைக்­கிறார், நாட­க­மா­டு­கிறார் என்று சந்­தேகம் கொண்ட அந்த மணப்பெண் இது குறித்து தனது குடும்­பத்­தி­ன­ரிடம் கூறியுள்­ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்­பத்­தி­னர், உட­ன­டி­யாக ரங்­கநாத் வீட்­டுக்கு சென்­றனர்.
அங்கு அவ­ரது பெற்­றோ­ரிடம் பேசி­ய­போது, எங்கள் மக­னுக்கு விருப்பம் இல்­லாத இந்த திரு­ம­ணத்தில் எங்­க­ளுக்கும் விருப்பம் இல்லை என்று மறுத்து விட்­ட­னராம்.

இதை­ய­டுத்து மணப்­பெண்னின் குடும்­பத்­தினர், மணப்­பெண்ணை அழைத்து சென்று சுப்பிரமணியபுரா காவல் நிலை­யத்தில் புகார் செய்­தனர். இதன் பேரில் பொலி­ஸார் வழக்குப் பதிவு செய்து, ரங்­கநாத் மற்றும் அவ­ரது தந்தை வர­த­ராஜன், தாய் ஜெயம்மா, உற­வினர் ரவி மற்றும் அவ­ரது மனைவி சியா­மளா ஆகிய 5 பேரையும் கைது செய்­தனர்.

பொலி­ஸாரின் விசா­ர­ணையில் ”மணப்­பெண்­ணிடம் தனக்கு மூளையில் கட்டி இருப்­ப­தாக பொய் சொன்ன ரங்­கநாத், பொலி­ஸா­ரிடம் வேறு மாதி­ரி­யான கார­ணங்­களை சொல்லியுள்ளார்.

அதா­வது, திரு­ம­ணத்­துக்கு பிறகு வேறு வீடு பார்த்து, நாம் தனிக்­கு­டித்­தனம் போகலாம் என்று மணப்பெண், ரங்­க­நாத்தை வற்­பு­றுத்­தி­னாராம்.

‘திரு­ம­ணத்­திற்கு முன்பே, குடும்­பத்தில் இருந்து தன்னை பிரிக்க நினைக்கும் அந்த பெண்ணை திரு­மணம் முடித்தால், இனி வரும் நாட்­களில் எப்­ப­டி­யெல்லாம் தொல்லை கொடுப்­பாரோ? என்ற கார­ணத்­தினால் தான் இந்த திருமணத்தை நிராகரித்தேன்.

என்னை சிறையில் அடைத்தாலும் சரி, ஆனால் இந்த திருமணத்திற்கு மட்டும் சம்மதிக்கவே மாட்டேன்’ என்று ரங்கநாத் உறுதியாக பொலி­ஸா­ரிடம் கூறிவிட்டதாக, பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.