வெனிசுலா சிறையில் 15 கைதிகள் வெட்டிக் கொலை!!

335

veniz

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் மேற்கில் உள்ள மராகாய்போ நகரின் சிறையில், திங்கள் இரவு முதல் இரு வேறு கும்பல்களை சேர்ந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இந்த கலவரத்தில் சிறைக்கைதிகள் 15 பேர் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரும் தலைகள் வெட்டப்பட்டும், உடல்களை கூறும் போட்டும் கொல்லப்பட்டுள்ளனர்.

மற்றொரு இடத்தில் நடந்த மோதலில் இன்னொருவரும் கொல்லப்பட்டார். இங்கு சிறைகளில் கைதிகளின் கூட்டம் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.

சபானிடா சிறையில் 4000 கைதிகள் அதாவது அதன் கொள்ளளவை காட்டிலும் நான்கு மடங்கு அதிகமானோர் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். வெனிசுலாவில் சிறைக்கலவரத்தில் மட்டும் வருடத்திற்கு குறைந்தது 500 கைதிகள் கொல்லப்படுகின்றனர் என்று கூறப்படுகிறது.