தமிழர்களைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் : நடிகை ரோஜா!!

336

ஜல்லிக்கட்டுக்காக தமிழக மக்கள் போராடி வெற்றி பெற்றது போல் ஆந்திர மக்களும் போராட வேண்டும் என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்.

நகரி தொகுதி எம்.எல்.ஏ-வும், வய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மாநில மகளிரணி தலைவியுமான நடிகை ரோஜா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதன் பின்னர் வெளியே வந்த ரோஜாவிடம் நிருபர்கள் மத்திய பட்ஜெட் குறித்து கருத்து கேட்டனர்.

அப்போது பேசிய நடிகை ரோஜா, ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் மத்திய அரசில் அங்கம் வகித்தும் பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை.

இந்த பட்ஜெட் ஆந்திர மக்களுக்கு நிராசையாக இருக்கிறது. ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்துக்கான அறிவிப்பு இல்லை. மத்திய அரசு ஆந்திர மக்களை வஞ்சித்துவிட்டது.

முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தேவையானவற்றை கேட்டு பெறாமல் மவுனமாக இருக்கிறார்.

ஜல்லிக்கட்டுக்காக தமிழக மக்கள்போராடி வெற்றி பெற்றனர். அதுபோல் மாநில சிறப்பு அந்தஸ்துக்காக ஆந்திர மக்கள் போராட வேண்டும் என்று கூறியுள்ளார்.