குழந்தையை கொலைசெய்து உண்ணுவதற்கு திட்டமிட்டவருக்கு சிறை!!

680

Geoffrey

குழந்தையொன்றை கடத்தி வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்ய முற்பட்ட பிரித்தானியருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுடுள்ளது.

குறித்த குழந்தையை கொலை செய்த பின்னர் உண்ணுவதற்காகும் அவர் திட்டமிட்டிருந்ததாக அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து 40 வயதுடைய குறித்த நபருக்கு அமெரிக்க நீதிமன்றம் சுமார் 27 வருட கால சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.

இவர் இணையத்தளம் ஊடாக பல மாதங்களாக இந்த சதித் திட்டம் தொடர்பில் சக நண்பருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.