காதலியை கொலை செய்து விட்டு : காதலன் செய்த கொடூர செயல்!!

289

மேற்கு வங்காளத்தில் காதலியை கொலை செய்து விட்டு, வீட்டுனுள் புதைத்து வைத்த காதலன் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் உதயன் தாஷ். இவருக்கு பேஸ்புக் மூலம் அஹங்ஷா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் அதன் மூலம் மனம் விட்டு பேசியுள்ளனர். நட்பாக இருந்து வந்த இவர்கள் உறவு நாளைடைவில் காதலாக மாறியுள்ளது.

இதைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்கள் காதலில் திடீரென்று விரிசல் ஏற்பட்டுள்ளது. இது பெரிதும் முற்றியதால் கடந்த டிசம்பர் மாதம் இருவருக்கும் வாக்குவாதம் நடந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த உதயன் தாஷ், அஹங்ஷாவை கொலை செய்து வீட்டினுள் புதைத்து வைத்துள்ளார்.

அஹங்ஷாவின் பெற்றோர் அவருடைய தொலைப் பேசிக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து தொலைப்பேசியை எடுக்காததால் சந்தேகமடைந்து பொலிசில் புகார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகமடைந்த பொலிசார் உதயன் தாஷ்வின் வீட்டை சோதனை செய்த போது, அஹங்ஷா கொலை செய்யப்பட்டு வீட்டினுள் புதைத்து வைத்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் பொலிசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.