500 ரூபாய்க்கு விற்கப்படும் அழகிய பெண்களின் மொபைல் எண்கள் : அதிர்ச்சித் தகவல்!!

634

உத்திரபிரதேச மாநிலத்தில் இளம் பெண்களின் மொபைல் எண்கள் விலைக்கு விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநில பொலிசாருக்கு மொபைல் போன் மூலமாக பெண்கள் அதிக அளவு ஈவ்டீசிங் செய்யப்படுகிறார்கள் என புகார் வந்ததையடுத்து, உத்திரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் உதவி மையம் ஒன்றை அமைத்தார்.

மேலும் மொபைல் போன்களில் பெண்கள் கிண்டல் மற்றும் கேலி செய்யப்பட்டால் புகார் தெரிவிக்க சிறப்பு எண் 1090 என அறிவித்தார்.

கடந்த 4 வருடங்களில் இந்த உதவி மையத்தில் 6 லட்சம் புகார்கள் குவிந்து உள்ளன.இந்த புகார்களில் 90 சதவீதம் போன் மூலம் துன்புறுத்தப்படுவதாக பதிவானது.

இந்நிலையில் பொலிசார் விசாரணையில், இளம் பெண்களின் போன் எண்கள் ரீசார்ஜ் கடைகள் மூலம் வெளிப்படுத்தப்படுவதாக தெரியவந்தது. மேலும் இளம் பெண்களின் மொபைல் எண் கொடுக்க ரீசார்ஜ் கடைகள் பணம் வாங்கி உள்ளன எனவும் தெரிய வந்தது.

மிகவும் அழகான பெண் மொபைல் போன் எண் கிடைக்க வேண்டும் என்றால் ரூ. 500 வரை வசூல் செய்து உள்ளனர். சராசரி பெண்களின் எண்களுக்கு ரூ. 50 வரை வசூலித்து உள்ளனர்.

தற்போது இதுகுறித்து விசாரணை நடத்த பொலிசார் முடிவு செய்துள்ளனர்.