ஓடும் ரயில் முன்னர் குதித்த நபர் : பதறவைக்கும் சிசிடிவி படங்கள்!!

370

மும்பையில் ஓடும் ரயில் முன்னர் பாய்ந்த நபர் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மும்பை மாநிலத்தில் உள்ள இரயில் நிலையம் வழக்கம் போல நேற்று பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

அப்போது பிளாட்பாரம் அருகே ஒரு இரயில் வந்து கொண்டிருந்தது. திடீரென ஒரு நபர் ரயில் தண்டவாளத்தில் குதித்தார். பின்னர் பயத்தில் அவர் அப்படியே தண்டவாளத்தில் படுத்து கொண்டார்.

இதை பார்த்த இரயில் ஓட்டுனர் ரயிலின் வேகத்தை குறைக்க முயன்றார். ஆனாலும் அவரால் வேகத்தை குறைக்க முடிந்ததே தவிர ரயிலை நிறுத்த முடியவில்லை.

அந்த நபரை கடந்து ரயில் சென்றது. ஆனால் தண்டவாளத்தில் ரயிலுக்கு அடியில் படுத்திருந்த அவர் சிறு கீரல் கூட ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக பிழைத்து கொண்டார்.

பின்னர் பொலிசார் வந்து அவரை விசாரித்ததில் அவர் பெயர் Dinkar Sakpal (65) என தெரியவந்தது.

மேலும் அவருக்கு புற்று நோய் இருப்பதும், குடும்பத்தை பிரிந்திருப்பதும் தெரியவந்ததுள்ளது.

இந்த விரக்தியினால் தான் அவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை பொலிசார் கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பினார்கள்.