மேடையில் நடனமாடிய பிரபல நடன கலைஞர் சுருண்டு விழுந்து பலி : வெளியானது அதிர்ச்சி வீடியோ!!

382

மேடையில் பரதநாட்டிய நடனம் ஆடி கொண்டிருந்த நடன கலைஞர் திடீரென அதே இடத்தில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஓமனகுட்டன் (48) பிரபல பரதநாட்டிய கலைஞரான இவர் இந்தியா முழுவதும் கடந்த 25 ஆண்டுகளில் 400 மேடைகளில் அரங்கேற்றம் செய்துள்ளார்.

இவர் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரதநாட்டியம் ஆடி கொண்டிருந்தார். அவருடன் ஒரு பெண்ணும் இணைந்து நடனம் ஆடினார்.

ஆடி கொண்டிருக்கும் போதே ஓமனகுட்டன் அதே மேடையில் சுருண்டு விழுந்துள்ளார். முதலில் இதை பார்க்காத அருகில் இருந்த பெண் பின்னர் இதை கவனித்து உதவிக்கு ஆட்களை அழைத்துள்ளார்.

உடனே ஓமனகுட்டனை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.

ஓமனக்குட்டனின் இறப்பிற்கான காரணம் இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.