புலியும் – சிங்கமும் இணைந்து பெற்ற குட்டி!!

495

சிங்­கமும் புலியும் இணைந்து பெற்ற குட்­டி­யொன்று ரஷ்­யா­வி­லுள்ள நட­மாடும் மிருகக் காட்­சி­சாலை ஒன்றின் பார்­வை­யா­ளர்­களை வெகு­வா­ககக் கவர்ந்­துள்­ளது.

பெண் புலி­யொன்றும் ஆண் சிங்­க­மொன்றும் இணைந்து இக் ­குட்­டியை பெற்­றுள்­ளன. நவம்பர் 11 ஆம் திகதி நட­மாடும் மிருகக் காட்­சி­சா­லை­யொன்று சுற்­று­லாவில் ஈடு­பட்­டி­ருந்த வேளையில் இப் ­பு­லிக்­குட்டி பிறந்­தது என இம்மி­ருகக் காட்­சி­சா­லையின் பிர­தான அதி­காரி எரிக் அய்­ர­பெட்யன் தெரிவித்துள்ளார்.

இரண்­டரை மாத வய­தான நிலையில் 5 கிலோ­கிராம் எடை­யுடன் இப்­பு­லிக்­குட்டி உள்­ளது. இவ்­வாறு சிங்­கமும் புலியும் இணைந்து குட்டி ஈனு­வது அரி­தா­ன­தாகும்.

இத்­த­கைய குட்­டிகள் பொது­வாக, சாதா­ரண சிங்­கக்­குட்­டிகள் அல்­லது புலிக்­குட்­டி­க­ளை­விட பல­வீ­ன­மா­ன­மாகக் காணப்­படும் என மொஸ்­கோ­வி­லுள்ள டார்வின் நூத­ன­சா­லையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் திமித்ரி மிலோ­சேர்டோவ் தெரி­வித்­துள்ளார்.

இதன் தாய் மேற்­படி மிருகக் காட்­சிச்­சா­லையின் ஒரே­யொரு பெண் புலி­யாகும். அது 3 குட்­டி­களை பிரச­வித்த போதிலும் ஒன்று மாத்­தி­ரமே உயிர்­தப்­பி­யுள்­ளது.

“இப் ­பு­லிக்­குட்­டியை நாம் கூண்டில் அடைத்து வைப்­ப­தில்லை. ஏனெனில், வெளியே அதிக குளி­ராக உள்­ளது. இது எவ்வேளையிலும் எமது அருகிலேயே உள்ளது. எமது கட்டிலில் அது உறங்குகிறது” என எரிக் அய்ரபெட்யன் தெரிவித்துள்ளார்.