4 1/2 வயது மகனை பட்டினிபோட்டு கொன்ற தாய்!!

310

son

பிரித்தானிய பிராட்போட் நகரில் வசித்து வரும் 43 வயது அமந்த குட்டனின் படுக்கை அறையிலிருந்து கடந்த 2011ம் ஆண்டு 4 1/2 வயது சிறுவன் ஒருவனின் பதப்படுத்தப்பட்ட உடலை பொலிசார் கண்டுபிடித்தனர்.

இது குறித்து பிராட்போட் கிரவுன் நீதிமன்றத்தில் அவனது தாயார் அமந்தா குட்டன் மீது விசாரணை நடந்து வருகிறது. இதுகுறித்த விசாரணையில், கடந்த 2009ம் ஆண்டு நான்கரை வயது இருந்தபோது அவன் பட்டினியால் இறந்து இருக்கிறான். அவனது உடலை அந்த அறையின் கட்டிலிலேயே சுமார் 2 ஆண்டுகள் வரை வைத்திருந்துள்ளார் அந்த பெண்மணி எனத் தெரியவந்துள்ளது.

மதுபானம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையான அமந்தாவின் அறையானது மிகவும் துர்நாற்றத்துடன் இருப்பதையும் அந்த குழு உறுதி செய்தது. ஆனால் தான் கொலை செய்யவில்லை என்று அமந்தா தரப்பில் மறுக்கப்படுகிறது. ஆனால் அமந்தா அந்த குழந்தையை பட்டினி போட்டு மருத்துவ உதவியும் செய்யாமல் கொன்றார் என்று தற்போது அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது. அமந்தாவின் கணவர் அப்டாப் கான் அவரை விட்டு முன்னரே பிரிந்து சென்று வேறு எங்கோ வசித்து வருகிறார்.