25 ஆண்டுகளுக்கு முந்திய மர்மக்கொலை : கொலையாளியை பிடிக்க உதவிய தொலைக்காட்சி தொடர்!!

303

ger

ஜேர்மனியில் 25 ஆண்டுகளுக்கு முன் சிறுமியை கொலை செய்த குற்றவாளியை பொலீசார் கைது செய்துள்ளனர். ஜேர்மனியில் ஒஸ்னாபிரியூக் நகரை சேர்ந்த ஒன்பது வயது பெண் பள்ளியிலிருந்து வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பொலீசில் புகார் செய்தனர்.

25 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி எவ்வித ஆதாரமும் சிக்காததால் வழக்கை கை விட்டனர். அண்மையில் அந்நாட்டின் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும், குற்ற சம்பவம் தொடர்பான தொடரை பார்த்த பொலீஸ் அதிகாரி ஒருவர், அதே பாணியில் வழக்கை விசாரிக்க முயற்சித்தார்.

அதன்படி பொலீஸ் வசமிருந்த 25 ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடைகள் மற்றும் அதில் படிந்திருந்த கொலையாளியின் தடயங்களை சேகரித்தார். இந்த கொலையில், சந்தேகப்படும் நபர்களிடம் மரபணு சோதனை நடத்தப்பட்டது. அதில், 45 வயதுடைய நபரின் மரபணு ஒத்துப்போனது.

இதையடுத்து அந்த நபர், கைது செய்யப்பட்டார். கடந்த 1987ம் ஆண்டு 19 வயதுடையவராக இருந்த குற்றவாளி ஒன்பது வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். அப்போது சிறுமி தன் பெற்றோரிடம் புகார் தெரிவிப்பதாக மிரட்டியதை அடுத்து அவளை கொலை,இந்த நபர் செய்துள்ளான் என போலீசார் கூறினர்.