சொந்த தோலை விற்ற நபர் : அருங்காட்சியகப் பொருளாக மாறிய விசித்திரம்!!

302

 
தனது தோலில் குத்தப்பட்டுள்ள பச்சைகளை காட்சிப்படுத்துவதற்காக, தோலை ஒரு அருங்காட்சியக ஏற்பாட்டாளருக்கு விற்பனை செய்துள்ள நிகழ்வு சுவிற்சர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

சுவிற்சர்லாந்தின் ஷுரிச்நகரில் வசித்து வரும் 40 வயதான டிம்ஸ்டெய்னர் என்பவர், தனது தோலில் அதிக பச்சை குத்திக் கொள்வதில் ஈடுபாடுடையவராவார் .

இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு, ஜெர்மனியில் அருங்காட்சியக ஏற்பாட்டாளராகவுள்ள, ரிக் ரெயின்கிங்கி என்பவரிடம் தனது பச்சை குத்திய தோலை விற்பனை செய்துள்ளார்.

இந்நிலையில் ரிக் ரெயின்கிங்கியின் ஏற்பாட்டில் அருங்காட்சியகம் எங்கு நடந்தாலும், அங்கு டிம் ஸ்டெய்னரின் பச்சை குத்திய தோலானது காட்சி பொருளாக காண்பிக்கப்படுகிறது.

மேலும் தற்போது தற்காலிக காட்சி பொருளாக இருக்கும் அவரது தோல், அவர் இறந்த பிறகு நிரந்தரமாக ரிக் ரெயின்கிங்கியின் காட்சிக்கூடத்திற்கு கொடுக்கப்படுவதற்கான அனுமதியையும் வழங்கியுள்ளார். அத்தோடு உலகில் அழியா புகழை பெறுவதற்காகவே தான் இதை செய்ததாக அவர் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.