பாரிய சவர்க்கார நுரைக்குள் 275 மனிதர் கள் கார் ஒன்றுடன் நின்று புதிய சாதனை படைத்துள்ளனர். செக் குடியரசின் மிலாடா பெலேஸ்லாவ் நகரில் அண்மையில் இச்சாதனை நிகழ்த்தப்பட்டது.
மெதேஜ் கோட்ஸ் என்பவரால் கின்னஸ் சாதனைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், 11 மீற்றர் நீளமும் 7.5 மீற்றர் அகலமும் கொண்ட பகுதியொன்றில் 275 பேர் நின்றுகொண்டிருந்தனர். இவர்களுக்கு மத்தியில் கார் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது.
இம் மனிதர்களையும் காரையும் மூடும் வகையில் பாரிய சவர்க்கார நுரை தயாரிக்கப்பட்டிருந்தது. திரையை அகற்றியவுடன் சில விநாடிகள் மேற்படி சவர்க்கார நுரைக்குள் மனிதர்கள் இருந்தனர்.
இதில் பங்குபற்றியவர்கள் குறைந்தபட்சம் 5 அடி 1 அங்குலம் (156 சென்ரி மீற்றர்) உயரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மெதேஜ் கோட்ஸ் 2008 ஆம் ஆண்டிலிருந்து இத்தகைய சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். 2014 ஆம் ஆண்டு 214 பேரை சவர்க்கார நுரையொன்றுக்குள் அடக்கிய மை கின்னஸ் சாதனையாக பதிவுசெய்யப்பட்டிருந்தது.
தற்போது 275 பேர் மற்றும் ஒரு காரை சவர்க்கார நுரைக்குள் அடக்கி புதிய சாத னை நிகழ்த்தப்பட்டுள்ளது.