பாரிய சவர்க்கார நுரைக்குள் 275 மனிதர்கள் : செக் குடியரசில் புதிய கின்னஸ் சாதனை!!

307

பாரிய சவர்க்­கார நுரைக்குள் 275 மனி­தர் கள் கார் ஒன்­றுடன் நின்று புதிய சாதனை படைத்­துள்­ளனர். செக் குடி­ய­ரசின் மிலாடா பெலேஸ்லாவ் நகரில் அண்­மையில் இச்­சா­தனை நிகழ்த்­தப்­பட்­டது.

மெதேஜ் கோட்ஸ் என்­ப­வரால் கின்னஸ் சாத­னைக்­காக ஏற்­பாடு செய்­யப்­பட்ட இந்­நி­கழ்வில், 11 மீற்றர் நீளமும் 7.5 மீற்றர் அக­லமும் கொண்ட பகு­தி­யொன்றில் 275 பேர் நின்­று­கொண்­டி­ருந்­தனர். இவர்­க­ளுக்கு மத்­தியில் கார் ஒன்றும் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இம்­ ம­னி­தர்­க­ளையும் காரையும் மூடும் வகையில் பாரிய சவர்க்­கார நுரை தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. திரையை அகற்­றி­ய­வுடன் சில விநா­டிகள் மேற்­படி சவர்க்­கார நுரைக்குள் மனி­தர்கள் இருந்­த­னர்.

இதில் பங்­கு­பற்­றி­ய­வர்கள் குறைந்­த­பட்சம் 5 அடி 1 அங்­குலம் (156 சென்­ரி­ மீற்றர்) உயரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என நிபந்­தனை விதிக்­கப்­பட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

மெதேஜ் கோட்ஸ் 2008 ஆம் ஆண்­டி­லி­ருந்து இத்­த­கைய சாத­னை­களை நிகழ்த்தி வரு­கிறார். 2014 ஆம் ஆண்டு 214 பேரை சவர்க்­கார நுரை­யொன்­றுக்குள் அடக்­கி­ய மை கின்னஸ் சாத­னை­யாக பதிவுசெய்யப்­பட்­டி­ருந்­தது.

தற்போது 275 பேர் மற்றும் ஒரு காரை சவர்க்கார நுரைக்குள் அடக்கி புதிய சாத னை நிகழ்த்தப்பட்டுள்ளது.