பொருளாளர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம் நீக்கம் : அ.தி.மு.க கட்சியில் அதிரடி!!

687

அ.தி.மு.க கட்சியில் நீண்ட காலமாக பொருளாளராக இருந்து வந்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நள்ளிரவில் அப் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயாலலிதாவின் சமாதியில் நீண்ட நேரம் மௌன அஞ்சலி செலுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து, பல பரபரப்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்த்தார்.

அத்துடன், முதலமைச்சர் பதவியை வலுக்கட்டாயமாக இராஜினாமா செய்ய வைத்தனர் என ஓ.பன்னீர்செல்வம் பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.

முதலமைச்சரின் குற்றச்சாட்டை தொடர்ந்து இரவு போயஸ் தோட்டத்தில் ஒன்று கூடிய அ.தி.மு.க கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், சற்று முன்னர் அ.தி.மு.க கட்சியில் நீண்ட காலமாக பொருளாளராக இருந்து வந்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அ.தி.மு.க கட்சியின் புதிய பொருளாளராக திண்டுகல் சீனிவாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.