சசிகலா குறித்து தெரியாது : பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு : நடிகர் கமல்ஹாசன் பரபரப்புப் பேட்டி!!

319

தமிழகத்தில் அரசமைக்க பன்னீர் செல்வத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகமே பரபரப்பாகக் காணப்படுகிறது. தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் இரவு சசிகலா மற்றும் முக்கிய அமைச்சர்கள் தான் தன்னை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதற்கு வற்புறுத்தினர் என்று திடீரென பரபரப்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்திருந்தார்.

இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இன்று சசிகலா, பன்னீர் செல்வம் மீது குற்றம் சாட்ட, பன்னீர் செல்வம் சசிகலா மிது குற்றம் சாட்ட தமிழக அரசியலே பெரும் குழப்பத்தில் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இது குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், எனக்கும் அரசியல் சார்ந்த தனிப்பட்ட கருத்துக்கள் உள்ளன. தற்போதைய அரசியல் கீழ்த் தரமனதாக இருக்கிறது.

நான் பன்னீர் செல்வத்திற்கு நண்பனோ அல்லது எதிரியோ அல்ல. ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் கருவியாக பன்னீர்செல்வம் உள்ளார்.

தமிழக மக்களை போலவே சசிகலாவின் தகுதி குறித்து எனக்கும் தெரியாது. ஒருவர் கூட நீண்ட காலம் இருந்ததற்காக அவருக்கு அரசியலுக்கு வரும் தகுதி கிடையாது.

அரசியல்வாதிகள் மீது எனக்கு கோபம் இருக்கிறது. அரசியல்வாதிகள் ஒன்று கடவுள்கள் அல்ல. மக்களின் எண்ணங்களுடன் அவர்கள் விளையாடக்கூடாது.

குதிரை பேரத்திற்கு அனுமதிக்ககூடாது. பன்னீர் செல்வம் திறமையற்றவர் என்று நான் எண்ணவில்லை. பன்னீர்செல்வத்தை அரசமைக்க அனுமதிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.