நைஜீரியாவில் 150 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!!

309

nig

ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் அரசுக்கெதிரான தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் போக்கோஹராம் என்ற இடத்தில் உள்ள காட்டு பகுதியில் முகாம் அமைத்து தங்கி இருந்தனர். அந்த இடத்தை ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 150 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பில் 16 வீரர்கள் கொல்லப்பட்டனர். 9 ராணுவ வீரர்களை காணவில்லை.

அவர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் தாக்குதல் நடந்து வருகிறது.