பன்னீர் செல்வம் ஒரு பயந்தாங்கொள்ளி, ஆளுநர் ஒரு முட்டாள் : சுப்பிரமணிய சுவாமி அதிரடி பேச்சு!!

290

நிர்ப்பந்தத்துக்கு பயந்து தனது முதல்வர் பதவியை பன்னீர் செல்வம் ராஜினாமா செய்திருந்தால் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, ‘அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவை தமிழக ஆளுநர் சட்டப்படி முதல்வராக்க வேண்டும்

எல்லாம் சட்டப்படி தான் நடக்க வேண்டும். சசிகலாவைப்பற்றி எனக்கு நல்ல அபிப்ராயம் இல்லை. ஆனால் அவரது உரிமையை சட்டத்தை மீறி பறிக்க வழியில்லை.

வி.கே.சசிகலாவை ஆளுநர் சட்டப்படி முதல்வராக்க வேண்டும். தமிழகத்தில் நடக்கும் அரசியல் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு அவர் சென்னையில் இருந்திருக்க வேண்டும்.

ஆனால், அவர் தவறு செய்திருக்கிறார். நிர்ப்பந்தத்துக்குப் பயந்து ராஜினாமா செய்திருந்தால், ஓ.பன்னீர்செல்வம் ஒரு பயந்தாங்கொள்ளி. முதலமைச்சர் ஆவதற்கு அவருக்குத் திறமை கிடையாது. அவருக்கு அந்த அந்தஸ்து கிடையாது.

ஓ.பன்னீர்செல்வம் அளித்த ராஜினாமா கடிதத்தைத் திரும்பப்பெற்றால் ஆளுநர் ஒரு முட்டாள் எனத் தெரிவித்துள்ளார்