வவுனியா தாண்டிக்குளத்தில் நடந்த கோர விபத்தின் CCTV காணொளி வெளியானது!!

748

 
இன்று(11.02.2017) பிற்பகல் 3 மணியளவில் A9 தாண்டிக்குளம் புகையிர நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்து அதே வீதியில் பயணித்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. பேரூந்தின் பின்பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது.

பேருந்தில் பயணம் செய்த கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த நடேசபிள்ளை கமலாகரன் (வயது 36) மற்றும் டிப்பர் சாரதியான றோபேட் சந்திரகுமார் (வயது 38) வவுனியா ஆகிய இருவரும் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்துப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.