வவுனியாவில் கடந்த டிசம்பர் 22ம் திகதியிலிருந்து உக்கிளாங்குளம் பகுதியிலுள்ள விஜயபாலன் பகீரதன் என்ற 35 வயது இளைஞனை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உக்கிளாங்குளம் பகுதியில் ஆட்டோ சாரதியான இவர் வீட்டில் நின்றபோது கடந்த வருடம் டிசம்பர் 22ம் திகதி 9 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் காணாமற்போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கைத்தொலைபேசி, மணிப்பேர்ஸ், அனைத்தும் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவர் எங்கு சென்றார், அல்லது இவரை யாரும் கடத்தியிருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞரைப்பற்றிய தகவல்கள் தெரிந்தால் வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கவும்.






