கடையில் கத்தியுடன் புகுந்து பணியாளரை தாக்கிய பெண்ணுக்கு 6 வருட சிறைத் தண்டனை!!(வீடியோ)

321

supermarket robberyஇங்கிலாந்தின் தென் கிழக்கு பகுதியில் கேன்டர்பரி (Canterbury) என்ற நகரில் இருக்கும் கடையொன்றுக்குள் கத்தியுடன் புகுந்து பெண்ணொருவர் அங்கு உதவியாளராக பணியாற்றி வரும் ஒருவரை தாக்க முயற்சித்துள்ளார்.

அந்த பெண் அவரை கத்தியால் தாக்க முயற்சித்த போதிலும் இவர் அந்த பெண்ணை தாக்கவில்லை. இதனால் அந்த கடையின் உதவியாளர் பாராட்டப்பட்டுள்ளார்.

59 வயதான மைக்கல் வைப்ரோ என்பவர் பணியாற்றும் எரிப்பொருள் நிரப்பும் நிலையத்தில் உள்ள சிறிய கடையொன்றுக்குள் மது அருந்திய நிலையில் எட்டு அங்குல நீளமான கத்தியுடன் புகுந்த 29 வயதான அனா சேம்பர்ஸ் என்ற பெண், காசாளர் இருக்கும் பகுதியில் இருந்த அவரை தாக்க முயற்சித்தார்.

மைக்கல் அந்த பெண்ணின் தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள பெண்ணுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத கையில் கத்தியை பிடிங்க முயற்சித்தர். இதில் அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அந்த பெண் தொடர்ந்தும் போத்தல் ஒன்றை உடைத்துடன் தாக்குதலை தொடர்ந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் கடையில் இருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் நடைபெற்று கொண்டிருந்த போது அங்கு சென்ற பொலிஸார் சேம்பர்ஸை கைதுசெய்தனர். சேம்பர்ஸ் பொலிஸாருடன் மல்லுகட்டினார். தனது நாய் குட்டி இறந்த கோபத்தில் அந்த பெண் இவ்வாறு வன்முறையாக நடந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் கேன்டர்பேரி கிரவுண் நீதிமன்றம் இந்த குற்றத்திற்காக அந்த பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது. அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.