மகன் அணிந்த டிசேட்டால் சிறைக்கு செல்லும் தாய்!!

322

tshirt

பிரான்சில் நான் ஒரு வெடிகுண்டு என்ற வார்த்தைகள் எழுதிய டிசேட்டை அணிந்து பள்ளிக்கு வந்த மாணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் ஜிகாத்ஸ் என்னும் மாணவன் நான் ஒரு வெடிகுண்டு என்ற வார்த்தையும் செப்டம்பர் 11, 2001 என்ற திகதியும் எழுதப்பட்ட டிசேட்டை அணிந்து பள்ளிக்கு சென்றுள்ளான்.

இந்த டிசேட்டால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் செப்டம்பர் 11, 2001 என்பது அமெரிக்காவில் நடைபெற்ற தாக்குதல் நாளாகும் மற்றும் அதில் நான் ஒரு வெடிகுண்டு என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளதால் சர்சை கிளம்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவனின் தாயார் மற்றும் மாமாவின் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் தீவிரவாத சம்பவங்களோடு தொடர்புடைய ஆடை என்பதால் தாயாருக்கு ஒரு மாத சிறையும் 2,000 யூரோ அபராதமும் மற்றும் மாமாவிற்கு 2 மாத சிறையும் 4,000 யூரோ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாணவனின் தாயார் கூறுகையில் இந்த டிசேட்டினை என்னுடைய அண்ணன் வாங்கி கொடுத்தார். மேலும் அதில் கூறப்பட்டுள்ள நான் ஒரு வெடிகுண்டு என்பதற்கு நான் அழகானவன் என்ற அர்த்தம் என்றும் அதோடு செப்டம்பர் 11 2009 என்பது என் மகனுடைய பிறந்த திகதி எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவரது அண்ணன் கூறுகையில் நாங்கள் தீவிரவாதத்தோடு சம்பந்தப்படுத்தி இந்த டிசேட்டினை அணிந்துவிடவில்லை. அதில் உள்ளது ஒரு நகைச்சுவையான விடயமே ஆகும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து இவர்களது சட்டத்தரணி கூறுகையில் இந்த விதிமுறையானது கடுமையானதாக உள்ளது என்றும் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.