அமெரிக்காவில் 850 பாம்புகள் உட்பட பல பிராணிகளை வளர்த்தவர் கைது!!

327

snakes group

அமெரிக்காவில் 850 பாம்புகளை வீட்டில் பதுக்கிய நபர் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அமெரிக்காவின், நியூயோர்க்கிலுள்ள ஷிர்லே பகுதியில் வசிப்பவர்,ரிச்சட் பேரிநெல்லோ. இவர் விலங்குகள் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரியாக உள்ளார்.

மியான்மர் நாட்டின் மலைப்பாம்பு உட்பட 850 பாம்புகளை தன் வீட்டில் பதுக்கி வைத்திருந்தார். இது மட்டுமல்லாது, ஆமை உள்ளிட்ட விலங்குகளையும் தன் வீட்டில் வைத்து கள்ளத்தனமாக விற்று வந்தார்.

இவர் மியான்மர் நாட்டின் நான்கு அடி நீளமுள்ள பாம்பை வளர்த்து உள்ளார். இந்த மலைப்பாம்பு 30 அடி நீளம் வளரக் கூடியது.

கனடா நாட்டில் சமீபத்தில், இரண்டு குழந்தைகளை மலைப்பாம்பு விழுங்கி விட்டது. இந்த சம்பவத்துக்கு பின் நியூயோர்க்கில், மலைப்பாம்பு வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறையை மீறி பாம்புகளை வைத்திருந்ததற்காக, ரிச்சட் மீது வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகள், மாசாசூசெட்ஸ் சரணாலயத்தில் விடப்பட்டன.