வழுக்கைத் தலை கொண்ட ஆண்களுக்கான விளையாட்டுப் போட்டியொன்று ஜப்பானில் நடைபெற்றுள்ளது. சுரூட்டா எனும் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இப் போட்டியில் 30 ஆண்கள் கலந்துகொண்டனர்.
சுரூட்டா நகரின் வழுக்கைத் தலை கொண்ட ஆண்களின் கழகத்தினால் இப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கயிறிழுத்தல் போட்டி பாணியில் விநோதமான போட்டியொன்றில் வழுக்கைத் தலை ஆண்கள் பங்குபற்றினர். கயிறின் இரு முனைகளும் போட்டியாளர்கள் இருவரின் தலையுடன் இணைக்கப்பட்டிருந்தன. அக் கயிற்றை இழுத்து தமது எதிராளியின் தலையிலிருந்து அதை விடுபடச் செய்வது தான் இப் போட்டி.
1989 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட மேற்படி கழகத்தினால் வருடாந்தம் பெப்ரவரி 22 ஆம் திகதி இப் போட்டி நடத்தப்படுகிறது. 64 வயதான டோஷியுக்கி ஒகாசவரா இவ் வருடம் முதல் தடவையாக இப் போட்டியில் பங்குபற்றினார்.
இப் போட்டி தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், எனது வழுக்கைத் தலை தொடர்பாக இதுவரை நான் கவலையடைந்திருந்தேன். இன்று வித்தியாசமாக உணர்ந்தேன்’ என்றார்.
இக் கழகத்தின் தலைவரான டெய்ஜிரோ சுகோ (70) கூறுகையில், உலகம் முழுவதுமிருந்து ஆண்கள் இப் போட்டியில் பங்குபற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன். இதன்மூலம் வழுக்கைத் தலை ஆண்களுக்கான ஒலிம்பிக் போட் டியை நாம் ஏற்பாடு செய்யலாம்’ என்றார்.