அப்பிளில் இருந்து காதுகள் வளர்க்கும் விஞ்ஞானி : மருத்துவப் புரட்சிக்கு வித்திடுவாரா?

333

காதுகள் உள்ளிட்ட மனித உறுப்புகளை அப்பிள்களிலிருந்து உருவாக்க முடியும் என கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானி ஆண்ட்ரூ பெல்லிங் தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த மனித செல்களுக்குப் பதிலாக பாதுகாப்பான மாற்று செல்களைப் பொருத்துவதும் மனித உடல் உறுப்புகளை உருவாக்குவதும் கடினமானது மட்டுமல்ல செலவு பிடிக்கக்கூடியதும் தான்.

இந்நிலையில், கனடாவைச் சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி ஆண்ட்ரூ பெல்லிங் செலவுகுறைந்த மாற்று உடலுறுப்புகளை அப்பிள் மூலம் உருவாக்கியுள்ளார்.

அப்பிளிலிருந்து காதுகளை வளர்த்தேன் என்கிறார் டாக்டர் ஆண்ட்ரூ பெல்லிங். ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் துணைப்பேராசிரியராகவும் டாக்டர் ஆண்ட்ரூ பெல்லிங் பணியாற்றி வருகிறார்.

முதலில் அப்பிள்கள் தேவையான உடல் உறுப்பின் வடிவில் செதுக்கப்பட்டு அதன் மரபணுக்கள், செல்கள் அனைத்தும் நீக்கப்படும். இறுதியில் நாரிழைக்கட்டமைப்பு மட்டும் மிஞ்சும்; இந்த நாரிழைக்கட்டமைப்பில் மனித மரபணுக்கள் பற்றி வளரும்.

சோதனைக்கூடத்தில் உரிய உபகரணங்களைக் கொண்டு மனிதசெல்கள் வளர்க்கப்படும். அது காதாக உருவெடுக்கும்.
இந்த காதுகளை விலங்குகளின் உடல் ஏற்றுக்கொண்டதைப் பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக பெல்லிங் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரிசோதனையின் பாதுகாப்பு, நடைமுறை சாத்தியம் குறித்து மருத்துவப் பரிசோதனைகள் நடக்கவுள்ளன. அதில் வெற்றி கிட்டினால் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இது மிகப்பெரிய புரட்சியாக அமையும்.

சேதமான உடலுறுப்புகள் மட்டுமல்லாமல் பிறவியில் இல்லாத உடலுறுப்புகளை உருவாக்குவதும் கூட எதிர்காலத்தில் சாத்தியமாகலாம்.