அதிகாரப் பகிர்வு குறித்து பேச்சுவார்த்தை நடாத்தத் தயார் : ஹெல உறுமய!!

532

HelaUrumaya

நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலமாக தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர தயார் என ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஶ்ரீ வர்ணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். சமூக ஜனநாயகக் கூட்டணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை காலமும் அதிகாரங்கள் பகிரப்படக் கூடாது என்பதில் ஜாதிக ஹெல உறுமய கட்சி உறுதியாக போராடி வந்தமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் பின்னர் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கோட்டே நாக விஹாரையின் பீடாதிபதி மாதுலுவே சோபித தேரர், சட்டத்தரணியும் மேல் மாகாணசபை உறுப்பினருமான ஶ்ரீலால் லக்திலக்க உள்ளிட்ட பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.