வவுனியாவில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளுக்கும் தூரமணி

578

வவுனியாவில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டிகளுக்கும் தூரமணி (மீற்றர்) பொருத்தப்படும் என வவுனியா மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சி.ரவீந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள முச்சக்கரவண்டிகளுக்கு தூரமானி பொருத்தும் நடவடிக்கை யாழ். வீதி மைதானத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், இந்த வருடஇறுதிக்குள் வவுனியா மாவட்டத்தில் உள்ள முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு நல்ல முறையிலான சீருடை வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதன்போது முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு தூரமானிகளை கைத்தொழில் முதலீட்டு அமைச்சர் ரிசாட் பதியுதீன் வழங்கி வைத்தார்.

இதற்கான நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

vna