நட்சத்திர ஹோட்டலில் நடிகை திரிஷா தகராறில் ஈடுபட்டு கலாட்டா செய்ததாக இணைய தளங்களில் பரபரப்பு செய்திகள் பரவி உள்ளன. திரிஷா தற்போது பூலோகம், என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் ஒரு படம் கைவசம் உள்ளது.
ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சமீபத்தில் நடிகர், நடிகைகளுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் விருந்து கொடுக்கும் நிகழ்ச்சியொன்று நடந்தது. இரவு நேரத்தில் இந்த விருந்து நடந்தது. இதில் நடிகை திரிஷா கலந்து கொண்டாராம். அவருடன் நடிகைகள் சங்கீதா, மகேஸ்வரியும் சென்று இருந்தார்களாம்.
விருந்து நள்ளிரவை தாண்டியும் நடந்தது. இதில் மதுபானங்களும் பரிமாறப்பட்டதாக கூறப்படுகிறது. விருந்தில் திரிஷாவுக்கும் அங்கிருந்த சிலருக்கும் திடீர் மோதல் ஏற்பட்டதாம். திரிஷா அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் திடீர் என கோபம் அதிகமாக ஒருவருக்கொருவர் அடிக்க பாய்ந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் விருந்தில் சலசலப்பு ஏற்பட்டது.
விருந்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அதன் பிறகு ஹோட்டல் ஊழியர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் திரிஷாவை அங்கிருந்து வெளியேறும்படி கூறினார்களாம். திரிஷா மறுக்க அவரை வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கிழக்கு கடற்கரை சாலையில் நள்ளிரவில் தோழிகளுடன் நின்று பேசிய திரிஷாவை போலீசார் அங்கிருந்து புறப்பட்டு செல்லும்படி நிர்ப்பந்தபடுத்தி அனுப்பி வைத்ததாக சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாகின.