
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் தெற்கு பகுதியில் இன்று 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் சில நிமிடங்கள் வரை நீடித்தது. இதில் வீடுகள், பாடசாலைகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஆனால் இவை பூகம்ப சேதத்தை தடுக்கும் வகையில் கட்டப்பட்டு இருந்ததால் சேதம் அதிகம் இல்லை.
70இற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் 7 பேர் காயம் அடைந்தனர். ஒருவர் பலத்த காயங்களுடன் இடிபாடுகளில் சிக்கி இருந்தார். அவரை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர்.
முன்னதாக நேற்று முன்தினம் பெருநாட்டில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பேர் பலியானார்கள்.





