
தேர்தலில் போட்டியிட்ட குறைவான வாக்குகள பெறும் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் உரிமையை இரத்துச் செய்யுமாறு பல சிவில் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் யோசனை முன்வத்துள்ளதாக தேர்தல் ஆணையளார் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார். அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் அதிகளவில் தேர்தலில் போட்டியிடுவதால் சுமார் இரண்டு அடி நீளத்திற்கு வாக்குச் சீட்டை அச்சிட வேண்டியுள்ளது.
அத்துடன் அதனை சுமார் எட்டு மடிப்புகளாக மடித்து வாக்கு பெட்டியில் போடவேண்டியுள்ளது. வாக்கு எண்ணும் போது மட்டுமல்லாமல் கடதாசி செலவுகளை பார்க்கும் போது இது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
என்னிடம் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளில் அளிக்கப்பட்ட ஆயிரம் வாக்குகளில் ஒரு வாக்கைக் கூட பெறாத அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்ற யோசனையும் உள்ளது.
எனினும் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரத்தை தவிர சட்டத்தை இயற்றும் அதிகாரம் என்னிடம் இல்லை. இதனால் இதனை மக்கள் பிரதிநிதிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.





