இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

581

hiv

உலகம் முழுவதும் எச்.ஐ.வி, எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இலங்கையில் அது சடுதியாக அதிகரித்து வருவதாக எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சிசிர லியனகே தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்..

இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சகல நோயாளர்களையும் எச்.ஐ.வி. பரிசோதனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

தற்போதே இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்காது போனால் எயிட்ஸ் நோய் தொற்று நோய் போல் பரவ ஆரம்பித்து விடும். ஆபத்தான பாலுறவுகளில் ஈடுபடும் நபர்கள் இரத்த பரிசோதனைகளை செய்து கொள்வதில்லை. இதுவே இந்த நோய் வேகமாக பரவ காரணமாகியுள்ளது.

2011ம் ஆண்டு 146 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். 2012 ம் ஆண்டு 186 பேர் அடையாளம் காணப்பட்டனர். அத்துடன் இந்த வருடத்தில் முதல் ஆறு மாதங்களில் எயிட்ஸ் நோய் பாதிப்புக்கு உள்ளான 90 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

மொத்தமாக இதுவரை 1739 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையில் மொத்தமாக 4500 எயிட்ஸ் நோயாளர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது என்றார்.