
கிளிநொச்சி தொடக்கம் ஆனையிறவு கடல்நீரேரி வரையில் தண்டவாளம் பொருத்தும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.
இந்நிலையில் ஆனையிறவு கடல்நீரேரியில் புகையிரதப்பாதை கொங்கிறீட் சுவர் அமைக்கப்பட்டு பலமான பாதையாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆனையிறவில் புதிய புகையிரத நிலையம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருவதோடு ஆனையிறவு தொடக்கம் பளை வரையான பாதையில் உள்ள பாலங்கள் புனரமைப்பு பணி நிறைவடையும் நிலையில் உள்ளன.
பளை தொடக்கம் முகமாலை வரையான பகுதிகளில் சில இடங்களில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையும் இடம்பெறுகின்றது.
கண்ணிவெடி அகற்றும் பணி நிறைவுற்றதும் இப்பகுதி புனரமைப்பு வேலைகள் துரிதகதியில் நிறைவடைந்துவிடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.





