வவுனியா நகரசபைச் செயலாளரின் அதிரடி உத்தரவு : மகிழ்ச்சியில் சாரதிகள்!!

600

 
வவுனியா வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் (28.03.2017) இரவு வீதியில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக வீதியில் நின்ற மாடுகளை நகரசபை ஊழியர்களின் உதவியுடன் பிடிக்கப்பட்டு நகரசபையில் கட்டிவைக்கப்பட்டள்ளது. இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளரிடம் தொடர்பு கொண்ட போது,

வவுனியாவிலிருந்து வேப்பங்குளம் வரையும் A9 வீதி , ஹொரவப்பொ த்தானை வீதி போன்ற வவுனியா நகரசபைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி செயற்ப்பாட்டின் காரணமாக போக்குவரத்துக்கு இடையூராக நின்ற 32 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது மாடுகள் நகரசபை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

மாட்டின் உரிமையாளர் தண்டம் ரூபா.1000 , மாட்டினை பிடித்தமைக்கான கூலி ரூபா 600 , நாளொன்றுக்கு ரூபா 300 வீதம் செலுத்தப்பட வேண்டும் குறித்த நாட்களுக்குள் மாட்டினை மீட்டெடுக்கவில்லையென்றால் மாடு ஏல விற்பனைக்கு விடப்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.

இரவு வேளைகளில் கட்டக்காலி கால்நடைகளினால் வீதி விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றது. நகரசபைச் செயலாளரின் அதிரடி செயற்பாட்டினால் தங்கள் மகிழ்ச்சியடைவதாகவும் தற்போது வீதியில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் குறைந்து காணப்படுவதாவும் மேலும் இச் செயற்பாட்டினை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும னவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.