வவுனியாவில் வேலைவாய்ப்பினை வழங்கக் கோரி பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்!!

583

 
வவுனியாவில் இன்று (30.03.2017) காலை 9.30 மணியளவில் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் ஒன்றிணைந்த வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் வவுனியா மாவட்ட வேலையில்லாப்பட்டதாரிகள் தமக்கான வேலைவாய்ப்பினை வழங்குமாறு தெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் ஒன்றிணைந்து ஏமாற்றாதே ஏமாற்றாதே பட்டதாரிகளை எமாற்றாதே, வழங்கு வழங்கு வேலைவாய்ப்பினை வழங்கு, கொடு கொடு வேலைவாய்ப்பினைக் கொடு போன்ற வாசகங்களைத் தாங்கியவாறு பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து பேரணியாக சென்ற வேலையில்லாத பட்டதாரிகள் பஜார் வீதிவழியாக வந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக வவுனியா மாவட்ட செயலகத்தினை சென்றடைந்து உதவி அரசாங்க அதிபர் என்.கமலதாசனிடம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், பிரதமர், ஜனாதிபதிக்கான மகஜரை கையளித்தனர்.

கடந்த பல நாட்களாக வடகிழக்குப் பகுதிகளில் வேலையில்லாப் பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பினை வழங்குமாறு தெரிவித்து பல போராட்டங்களை முன்னெடுத்த வருகின்றனர்.