துபாயில் கடற்­கரை நூலகம் திறப்பு!!

417

 
ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸின் ஒரு பிரந்­தி­ய­மான துபாயில் கடற்­கரை நூலகம் (பீச்லைப்­ரரி) திறந்­து­வைக்­கப்­பட்­டுள்­ளது. துபாய் மாந­கர சபை­யினால் கடந்த சனிக்­கிழமை இந்த நூலம் திறந்­து­வைக்கப்பட்டது.

கடற் ­கரைக்குச் செல்­ப­வர்கள் புத்­த­கங்­களை வாசிப்­பதை ஊக்­கு­விப்­ப­தற்­காக இத்­திட்டம் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மத்­திய கிழக்கில் இத்­த­கைய கடற்­கரை நூலகம் ஸ்தாபிக்­கப்­பட்­டமை இதுவே முதல் தட­வை­யாகும். அரபு மற்றும் ஆங்­கில மொழி மூல­மான நூல்கள் இங்கு வைக்­கப்­பட்­டுள்­ளன.

துபாய் கடற்­க­ரை­களில் 8 கடற்­கரை நூல­கங்கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் துபாய் மாந­கர சபை அறி­வித்­துள்­ளது . இந்­நூ­ல­கங்கள் சூரிய ஒளிமூல­மான மின்­சா­ரத்தைப் பெறு­வ­துடன் தானாக ஒளிர்ந்து அணையும் மின் விளக்குகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.