ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஒரு பிரந்தியமான துபாயில் கடற்கரை நூலகம் (பீச்லைப்ரரி) திறந்துவைக்கப்பட்டுள்ளது. துபாய் மாநகர சபையினால் கடந்த சனிக்கிழமை இந்த நூலம் திறந்துவைக்கப்பட்டது.
கடற் கரைக்குச் செல்பவர்கள் புத்தகங்களை வாசிப்பதை ஊக்குவிப்பதற்காக இத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் இத்தகைய கடற்கரை நூலகம் ஸ்தாபிக்கப்பட்டமை இதுவே முதல் தடவையாகும். அரபு மற்றும் ஆங்கில மொழி மூலமான நூல்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.
துபாய் கடற்கரைகளில் 8 கடற்கரை நூலகங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் துபாய் மாநகர சபை அறிவித்துள்ளது . இந்நூலகங்கள் சூரிய ஒளிமூலமான மின்சாரத்தைப் பெறுவதுடன் தானாக ஒளிர்ந்து அணையும் மின் விளக்குகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.